Skip to content
Home » ஏன் இந்த ம(த)யக்கம் – 2

ஏன் இந்த ம(த)யக்கம் – 2

ஏன் இந்த ம(த)யக்கம் – 1

சென்ற பகுதியின் தொடர்ச்சி..

நான் குளிரில் நடுங்கி கொண்டிருக்க அதை பார்த்து அவன் என்னை நோக்கி நெருங்கி வந்தான்.

அவன் என்னை நோக்கி வரும் போது ஒருபக்கம் அவன் மீதிருக்கும் மயக்கத்தில் சந்தோஷமாகவும் மறுபக்கம் தயக்கத்தினால் ஏதாவது செய்துவிடுவானோ என கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

என் பக்கத்தில் வந்து அவன் போட்டியிருந்த ரெயின்கோர்ட்டை கலட்டி என் கையை பிடித்து முன்னால் இழுத்து போர்த்திவிட்டான்.

அந்த மழையிலும் தொடர்ந்து அடிக்கும் காற்றினால் ஏற்பட்ட குளிரிலும் அவன் விட்ட மூச்சுக்காற்று என் உடம்பில் படாமல் இருக்கவில்லை.

அவனின் மூச்சுக்காற்று என் பரிசத்தில் பட்டதும் அதுவரை கொஞ்சம் அடங்கியிருந்த என் காம உணர்ச்சிகள் மீண்டும் கிளர்ச்சியடைந்து எழ ஆரம்பித்தன.

இது மாதிரி என் பரிசத்தை அவனின் கைகள் ஏற்கெனவே ஒருமுறை தொட்டு இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு அவன் அந்த அபார்ட்மெண்டிற்கு வந்து குடியேறிய சில தினங்கள் தான் ஆகியிருந்தன. அவன் மட்டும் மொட்டைமாடியில் நின்று காலையில் ஏதோ எக்ஸசைஸ் பண்ணிட்டு இருந்தான்.

நான் வருவதை கூட கவனிக்காமல் அவனுடைய வேலையிலே கவனமாக இருந்தான்.

ஆனால் நானோ அவனையே பார்த்து ரசித்துக் கொண்டே ஏதோ ஒரு மயக்கத்தில் அவன் மீது போய் மோதி எங்களின் இருவரின் கால்களும் பிண்ணி கீழ விழபோகும் போது சரியாக திரும்பி என் இடுப்பில் ஒருகையும் தோள்பட்டையில் ஒருகை வைத்து பிடித்து என்னை விழாமல் தடுத்து நிறுத்தினான்.

என்னை அவன் அப்போது தொட்ட போது எந்த மாதிரி ஓர் உணர்வை உணர்ந்தேனோ அதே உணர்வு இன்று என் பரிசத்தை தொட்டு ரெயின்கோர்ட் போட்டுவிடும் போது உணர்ந்தேன்.

அவனாக என்னை விட்டு விலகி செல்லும் வரை அந்த உணர்விலே மிதந்து கொண்டிருந்தேன். அவன் விலகி செல்லும் வரை அவனுடைய மூச்சுக்காற்றை நானும் சுவாசித்துக் கொண்டு தான் இருந்தேன்.

அதே மாதிரி எனக்கு எதிரில் நின்ற அவனும் மழையில் நனைந்த என் பரிசத்தின் மேல் ஒருவித மயக்கத்தில் இருக்கிறான் என்பதை அவனுடையை பார்வை தெளிவாக காட்டியது.

ஆனால் என்னை போன்றே ஒரு சிறு தயக்கம் அவனுக்குள்ளும் இருக்கிறது. அவன் விலகும் சில வினாடிகள் வரை உணர்ச்சிகள் விட்ட ஆழான சூடான மூச்சுக்காற்றை அவனும் சுவாசித்து இருக்கிறான்.

அதனால் உடனே என்னை விட்டு விலகாமல் சில வினாடிகள் இருந்து மெதுவாக என்னை விட்டு விலகியிருக்கிறான்.

இப்படி இருவருக்குள்ளும் ஒருவித மயக்கமும் தயக்கமும் அனைத்திற்கும் இருந்துக் கொண்டே இருந்தது.

இருவரின் மன ஓட்டங்கள், எண்ணங்கள் ஒன்றாக இருந்தாலும் தயக்கத்தை யார் முதலில் உடைத்து தாகத்தை தீர்ப்பது என ஒரு குழப்பத்துடன் தயக்கமும் இருந்தது.

பின் அவன் தான் எங்களுக்குள்ள இருந்த தயக்கத்தை உடைத்து பேச ஆரம்பித்தான்.. அவனை போன்றே அவனின் குரலும் இனிமையாக இருந்தது.

“நீங்க அக்ஸரா அபார்மெண்ட்ல குடியிருக்கீங்க தான.. பி பிளாக் 204ல” ஒருவித தயக்கத்தோடு கேட்க

“ம்ம். ஆமா.. அங்க தான் குடியிருக்கேன்” தயக்கத்தோடு பதிலளித்தேன்..

“மழைல எங்க போய்ட்டு வரீங்க.. அதுவும் இப்படி மழை பெஞ்சிட்டு இருக்கும் போது லக்கேஜ் வேற அதிகமாக இருக்கு.” அக்கறையோடு கேட்க

“இல்ல.. என் ஹஸ்பண்ட் வேலை விசயமா வெளியூர் போயிருக்காங்க. அதான் என் அம்மாவ போய் ஒரு எட்டு பாத்திட்டு வந்திடலாம் ஒரு வாரத்துக்கு முன்னோடியே போய்ட்டேன்.

இன்னிக்கு ஹஸ்பண்ட் ஊர்ல இருந்து வந்திடுவேன் சொன்னதுனால ஊர்ல இருந்து திரும்பினேன். வர வழியில மழையினால பஸ் லேட்.

இங்கையும் விடாம மழை பெய்திட்டே இருந்திருக்கு.. அது தெரியாம கிளம்பி வந்திட்டேன்..” ஏதோ குறுட்டு தைரியத்தில் அவன் கேட்க கேள்விக்கு இவ்வளவு பெரிய விளக்கத்தை குடுத்துவிட்டேன்.

நான் சொன்னதையும் கண் இமைக்காமல் சிரித்த முகத்துடன் அவனும் ரசித்து கேட்டான். அவன் என்னையும் நான் பேசியதை ரசிக்கிறான் என்பதே எனக்கு ஒருவித வார்த்தையால் சொல்லிவிட முடியாத மயக்கத்தையும், கிறக்கத்தையும் தந்தது.

அந்த உணர்வே உடல் முழுவதும் பரவி உணர்ச்சிகளை எல்லாம் மீண்டும் ஒருமுறை உயிர்த்தெழ செய்தது.. அவனுடைய இந்த பேச்சு தொடருமா என தெரியவில்லை.

தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.. நான் நினைத்த மாதிரி அவன் மீண்டும் பேச்சை தொடங்கினான்.. ஆனால் ஒரு தயக்கம் இன்னும் அவனிடம் இருப்பது தெளிவாக அவன் அணுகுமுறையில் இருந்து தெரிந்தது.

“இது தான் தாம்பரம் போறதுக்கு லாஸ்ட் டிரெயின் டிக்கெட் எடுக்கும் போது சொன்னாங்க..”

“ம்ம் ஆமா.. நா டிக்கெட் எடுத்திட்டு வந்து நின்னுட்டு இருந்தேன்.. அப்பதான் அனொன்ஸ் பண்ணாங்க.. கொஞ்ச நேரத்துல உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருந்தது. பஸ் இன்னும் லேட்டா வந்து இருந்தா என்ன பண்ணியிருப்பேன் எனக்கே தெரியல.”

“ஏன் டிரெயின் இல்லைனா என்ன பஸ் இல்ல கேப் புக் பண்ணி போக வேண்டிதான”

“டிரெயின் போனாலே தாம்பரம் போய் சேர ஒன் ஹவர் மேல ஆகும். பஸ் இல்ல கேப் புக் பண்ணி இந்த ரோட் டிராபிக்ல போய் சேர இன்னும் ஒன் ஹவர் ஆனா கூட ஆச்சரியம் பட ஒன்னுமில்ல..”

“ம்ம். ஆமா.. அதுவும் உண்மை தான்.”

“பஸ்ல பிரச்சனை இல்ல. கேப் புக் பண்ணி தனியா போனதில்ல.. எனக்கு தனியா இருக்கனும், தனியா டிராவல் பண்ணனும்னாலே பயம்.. அதான் டிரெயின் போயிடலாம் முடிவு பண்ணி வந்தேன் அண்ட் மொபைல் எல்லாம் பேக் உள்ள இருக்கு. அதலாம் இப்படி பெய்திட்டு இருக்க மழைல எடுத்து கேப் புக் பண்ணி லக்கேஜ் வச்சிட்டு போறது முடியாத ஒன்னு..”

“ம்ம்.. கரெக்ட் தான்..”

“கேப் இந்த மழைல புக் பண்ணினா கிடைக்கும் கன்பார்ம் சொல்ல முடியாது..”

“ம்ம். எஸ்.. நீங்க சொல்ற மாதிரி கேப் கரைட் டைம் கிடைக்கலனா கஷ்டம் தான்..

அவன் கேட்கும் கேள்விகளுக்கு நான் பலநாட்கள் பார்த்து நன்றாக பழகிவள் போல் பேசி பதிலளித்தது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது.

அவனிடம் இந்த பயணத்தில் இன்னும் பேச்சை வளர்க்க விரும்பினேன். அவனுடன் பேசுவது ஏதோ புதுவித வித்தியாசமான உணர்வை தந்தது.. இதற்கு முன் கிராமத்தில் இருந்த போது தெரிந்த ஆணிடம் பேசி பழகியிருக்கிறேன்.

ஆனால் இவனை பார்த்ததிலிருந்து ஒருவித மயக்கம், பேச நினைக்கும் போதெல்லாம் ஒரு தயக்கம், எல்லாம் இருந்தாலும் அந்த தயக்கம் கூட எனக்கு ஒருவித ஆர்வமான மயக்கத்தையே அவன் மீது தந்தது.

அது அவன் மீதான காதலா? இல்லை எந்த பெண்ணையும் வசிகரிக்கும் தோற்ற உடலமைப்பின் மீதான ஒரு காம மயக்கமா? என தெரியவில்லை.

எது எப்படியோ இன்னும் இருக்கும் சில நிமிடங்களை வீணாக்காமல் அவனுடன் பேசி அவனின் பேச்சை கேட்க விரும்பினேன். இவை எல்லாவற்றையும் சில நொடி பொழுதில் என் மனதிலே நினைத்து முடித்தேன்..

“இங்க டிரெயின் டிக்கெட் எடுத்திட்டு வந்து நிக்கும் போது என் பக்கத்தில தெரிஞ்ச ஆள் யாரும் இல்லாதது கூட கொஞ்சம் பயமா தான் இருந்தது..”

“ஓகோ.. தென்..?”

“உன்ன.. இல்ல.. உங்கள நடந்து வரும் போது பாத்தேன்.” மறுபடியும் தயக்கத்தோடு சொல்ல

“ஓ.. ஐ..சி..” இருவரிடமும் சில வினாடிகள் அமைதி நிலவியது.

“ஆனா அது நீ… இல்ல நீங்க தானா சரியா எனக்கு தெரியல. அதான் அமைதியா கூப்பிடமா இருந்திட்டேன்.”

“ம்ம். இட்ஸ் ஓகே..”

“பின்ன தான் தெரிஞ்சுது அது நீ.. நீங்க தான்..”

“நான் தான் தெரிஞ்சுதும் தென் பேசியிருக்கலாமே?” என ஒரு தயக்கத்தோடு சொல்ல

“ம்ம். பேசியிருக்கலாம் தான். ஆனா நானா வந்து எப்படி என்ன பேசுறது தெரியாம தான் பேசாம இருந்திட்டேன்.”

“எஸ்.. நீங்க சொல்றது கரெக்ட் தான்.. நாம முன்ன பின்ன பேசினது கூட இல்ல.. உங்களோட தயக்கம் கரெக்ட் தான்.”

“ம்ம். ஆமா நாம பாத்திகிட்டது கூட கம்மி தான். பேசினது கிடையாது. அதான் அமைதியா.. அப்படியே..” தயங்கிட்டே சொல்ல..

“ம்ம். பரவாயில்ல. தட்ஸ் நோ பிராப்ளம்..”

“ம்ம். ஓகே..”

“பின்ன ஏன் சன்பாத் மாதிரி ரெயின் பாத் எடுத்தீங்க..? ”

“மழைல நனைஞ்சிட்டு வந்தத சொல்றீங்களா?”

“நோ. நோ.. டிரெயின் ஏறின பிறகு திரும்பி ரெயின்பாத் எடுத்தீங்கள அத சொல்றேன்..”

“ஓஹோ.. அது வந்து மழைனா ரொம்ப புடிக்கும்.. அது இந்த மாதிரி சாரல் மழை பெய்யும் போது பாத்து அதே ரசிச்சிட்டே இருப்பேன்..”

“ம்ம்.. சூப்பர்..”

“வீட்டுல இருந்த இந்த மாதிரி ரசிக்க முடியாது. நா.. நாம இருக்குற அபார்மெண்ட்ல பால்கனியே கிடையாது. சோ ரசிக்க மூடியாது. இப்ப தான் மழைய ரசிக்குறதுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு.. அத ரசிச்சிட்டு இருந்தேன்..”

“ம்ம்.. மழைய ரசிச்சிட்டு இருந்தீங்க. தட்ஸ் ஓகே.. பட் எப்படி மழைல குளிச்சீங்க..”

“நா குளிக்கல.. அதுவா குளிப்பாட்டி விட்டு போய்ருச்சு..”

“ஹா.. ஹா..”

“காத்தும் மழையும் சேர்ந்து வந்தது.. வெளியில தலைல வச்சு இருந்ததுனால மழை என்னைய குளிப்பாட்டி விட்டு போய்ருச்சு..”

“ஹா.. ஹா. நல்லா பேசுறீங்க..”

“ஹிம்..”

அதன் பின் அவனை பற்றி நிறைய விஷயங்கள் அவனாகவே சொன்னான். அவனுடைய படிப்பு, வேலை, குடும்பம் பற்றி நிறையவே பேசினோம். இடையிடையே என்ன பற்றியும் கேட்கும் கேள்விக்கும் பதில் சொன்னேன்.

அவனை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. அதனாலே நான் முதல் முறையாக அவனிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.

“இந்த நேரத்துல தான் ஓர்க் முடிச்சு வருவீங்களா?”

“ம்ம். ஆமா.. இன்னிக்கு கொஞ்சம் ஒர்க் இருந்தது. அதனால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. டெய்லி இதுக்கு முன்னாடி டிரெயின்ல போய்விடுவேன்..”

“ம்ம்.. ஓர்க் இருந்தது கூட ஒருவிதத்துல நல்லது தான். எப்பவும் போற மாதிரி போய் இருந்தா நா இப்போ தனியா இந்த மழைல பயந்துட்டே டிராவல் பண்ணிட்டு இருப்பேன்..”

“ஹா.. ஹா.. இன்னும் நைட் ஆகல.. அதுக்குள்ள பயமா?”

“ஆமா.. எனக்கு தனியா போறதுனா பயம் தான்.. தெரிஞ்ச ஆள் யாயாவது இருக்கனும்..”

“ஓ.. அது கல்யாணம் ஆகாத பையனா இருந்தா கூட ஓகே தானா?”

அவன் இந்த கேள்வியை ஏன் கேட்டான் என தெரியவில்லை.. ஆனால் நான்,

“தெரிஞ்ச ஆளா இருந்தா கூட அவங்கள பத்தி கொஞ்சம் தெரிஞ்சி இருந்தா டிராவலே பண்ணுவேன்..”

“ஓ.. அப்போ என்ன பத்தி தெரியுமா?”

அவன் இந்த கேள்வி கேட்கும் போது டிரெயின் ஏதோ ஸ்டேஷனில் நிற்பதற்காக திடீரென ப்ரேக் போடப்பட்டது.

அதனால் அவன் சற்று தடுமாறி முன்னால் வந்து என் முகத்தின் இருபக்கத்திலும் கை வைத்து அவன் முகம் என் முகத்திற்கு மிக அருகில் இருந்தது.

இனியும் இந்த மயக்கம் தொடரும்…

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

2 thoughts on “ஏன் இந்த ம(த)யக்கம் – 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *